Thursday 25th of April 2024 11:50:56 PM GMT

LANGUAGE - TAMIL
-
யாழ்.மருத்துவ மாணவன் மரணம்; தரவுகளை சேகரிக்க பொலிஸாருக்கு நீதிமன்றம் பணிப்பு!

யாழ்.மருத்துவ மாணவன் மரணம்; தரவுகளை சேகரிக்க பொலிஸாருக்கு நீதிமன்றம் பணிப்பு!


யாழ் பல்கலைக்கழக மருத்துவ பீட மாணவன் சிதம்பரநாதன் இளங்குகின்றனின் மரணம் தொடர்பில் அவர் தங்கியிருந்து பகுதியில் உள்ள சிசிடிவி கமராக்களின் பதிவுகளையும், அவரின் தொலைபேசி பதிவுகளையும் பெற்று நீதிமன்றத்தில் சமர்ப்பிக்குமாறு கோப்பாய் பொலிஸாருக்கு யாழ்ப்பாண நீதவான் நீதிமன்ற நீதவான் பீற்றர் போல்  நேற்று வியாழக்கிழமை (26) உத்தரவிட்டார்.

 கடந்த 17. 11. 2020 அன்று கோண்டாவில் கிழக்கு வன்னியசிங்கம் வீதியில் உள்ள விடுதியில் தங்கி நின்று கல்வி கற்று வந்த யாழ்ப்பாண பல்கலைக்கழக மருத்துவ பீட மூன்றாம் வருட மாணவன் சிதம்பரநாதன் இளங்குன்றன்  சடலமாக மீட்கப்பட்டிருந்தார்.

இதுதொடர்பான வழக்கு விசாரணை இன்று வியாழக்கிழமை(26) யாழ்ப்பாண நீதவான் நீதிமன்றில் இடம்பெற்றது.

இதன்போது மரணமான யாழ் பல்கலைக்கழக மருத்துவ பீட மாணவன் சிதம்பரநாதன் இளங்குன்றன் சார்பில் மன்றில் சட்டத்தரணி சுகாஸ் மன்றில் முன்னிலையாகியிருந்தார்.

இளங்குன்றன் தங்கியிருந்த  பகுதியில் உள்ள சிசிடிவி கேமராக்களின் பதிவுகளையும், அவரின் தொலைபேசி அழைப்புக்களின் விவரங்களையும் பெற மன்று உத்தரவிடுமாறு  நீதிமன்றில் சட்டத்தரணி சுகாஸ் கோரிக்கை விண்ணப்பத்தை முன்வைத்தார்.

இதை அடுத்து, அப்பகுதியில் உள்ள சிசிடிவி கமராக்களின் பதிவுகளையும், அவர் பயன்படுத்திய தொலைபேசி அழைப்பு விவரங்களையும் பெற்று மன்றில் சமர்ப்பிக்குமாறு கோப்பாய் பொலிஸாருக்கு யாழ்ப்பாண நீதவான் நீதிமன்ற நீதவான் பீற்றர் போல்  உத்தரவிட்டார்.


Category: செய்திகள், புதிது
Tags: வட மாகாணம், யாழ்ப்பாணம்



பிந்திய செய்திகள்

BABY NAMES

Lorem Ipsum is simply dummy text of the printing and typesetting industry.

READ MORE