Saturday 18th of May 2024 06:34:01 PM GMT

LANGUAGE - TAMIL
.
மாவீரர் நாள் நினைவேந்தல் தொடர்பில் சுமந்திரன் - சரத் வீரசேகர கடும் வாக்குவாதம்!

மாவீரர் நாள் நினைவேந்தல் தொடர்பில் சுமந்திரன் - சரத் வீரசேகர கடும் வாக்குவாதம்!


மாவீரர் நாள் நினைவேந்தல் தொடர்பாக அமைச்சர் சரத் வீரசேகர மற்றும் தமிழ் தேசியக் கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ. சுமந்திரன் ஆகியோரிடையே பாராளுமன்றத்தில் இன்று கடும் வாக்குவாதம் இடம்பெற்றது.

பாராளுமன்ற உறுப்பினராக இருந்து கொண்டு மாவீரர் நாள் நிகழ்வில் பங்கேற்றமை குறித்து சுமந்திரனிடம் அமைச்சர் வீரசேகர கேள்வி எழுப்பினார்.

இதற்குப் பதிலளித்த சுமந்திரன், இலங்கை அரசாங்கத்தால் தேச விரோத குழுவாக முன்னர் வர்ணிக்கப்பட்ட ஜே.வி.பி. நிறுவனர் ரோஹன விஜேவீர இலங்கையில் பகிரங்கமாக நினைவுகூரப்படுகிறார். ஆனால் வடக்கில் உள்ள மக்கள் தங்கள் பிள்ளைகளை நினைவுகூர ஏன் அனுமதிக்கப்படவில்லை? என சரத் வீரசேகரவிடம் பதில் கேள்வி எழுப்பினார்.

இந்நிலையில் நேற்று இடம்பெற்ற மாவீரர் நாள் நினைவேந்தல் தொடர்பில் இருவருக்கும் இடையில் காரசாரமான விவாதங்கள் இடம்பெற்றன.


Category: செய்திகள், புதிது
Tags: ம.ஆ.சுமந்திரன், இலங்கை



பிந்திய செய்திகள்

BABY NAMES

Lorem Ipsum is simply dummy text of the printing and typesetting industry.

READ MORE