Friday 26th of April 2024 07:34:10 PM GMT

LANGUAGE - TAMIL
-
ஈஸ்டர் தாக்குதல் தொடர்பில்  அரசு நடவடிக்கை எடுக்காவிட்டால் மாற்று நடவடிக்கை - பேராயர் ரஞ்சித் ஆண்டகை!

ஈஸ்டர் தாக்குதல் தொடர்பில் அரசு நடவடிக்கை எடுக்காவிட்டால் மாற்று நடவடிக்கை - பேராயர் ரஞ்சித் ஆண்டகை!


"உயிர்த்த ஞாயிறு தினத் தாக்குதல் தொடர்பில் பொறுப்புக்கூற வேண்டியவர்களுக்கு உரிய வகையில் தண்டனையைப் பெற்றுக்கொடுக்க அரசு நடவடிக்கை எடுக்கவில்லை என்றால் மாற்று நடவடிக்கையை நாட வேண்டி ஏற்படும்." - இவ்வாறு கத்தோலிக்க திருச்சபையின் பேராயர் மெல்கம் கர்தினால் ரஞ்சித் ஆண்டகை எச்சரிக்கை விடுத்துள்ளார்.

ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் காவிந்த ஜயவர்தன பேராயரை இன்று சந்திக்க சென்றிருந்தபோது அவர் மேற்கண்டவாறு கூறியுள்ளார்.

இதன்போது அவர் மேலும் தெரிவித்ததாவது:-

"கத்தோலிக்க மக்கள் உயிர்த்த ஞாயிறு தினத் தாக்குதல் தொடர்பான உண்மை நிலைமை எப்போது வௌிவரும் என்று காத்துக் கொண்டிருக்கின்றனர். குண்டுத்தாக்குதல் நடத்தியமை, அதற்கு உதவியமை, நிதி வழங்கியமை தொடர்பில் நாம் திருப்தி அடையக் கூடிய வகையில் விசாரணைகள் இடம்பெற்றதா என்ற எண்ணம் எமக்கு ஏற்பட்டுள்ளது. அது அவ்வாறே காணப்படுகின்றது என்பதை துரதிஷ்டவசமாக எமக்குக் கூற வேண்டியுள்ளது.

ஒவ்வொரு நாளும் ஏற்படும் பிரச்சினைகளினால் இந்த விசாரணைகளை பின்தள்ள வேண்டாம் என அரசிடம் கேட்டுக்கொள்கின்றோம். ஜனாதிபதியால் - இந்த அரசால் உறுதியான வாக்குறுதி வழங்கப்பட்டது. இந்த விடயம் தொடர்பில் முழுமையான விசாரணை நடத்தி அதனுடன் தொடர்புடைய ஆணைக்குழுக்கள் குறித்து மாத்திரமன்றி குறிப்பாக அரச நிறுவனங்களால் முன்னெடுக்கப்படும் விடயங்கள் ஆராயப்படும் என எதிர்பார்க்கின்றோம். அவ்வாறு இல்லையெனில் மாற்று நடவடிக்கை எடுக்க நேரிடும். வேறு குழுக்களுக்கு இந்தப் பொறுப்பை வழங்க நேரிடும்" - என்றார்.


Category: செய்திகள், புதிது
Tags: இலங்கை



பிந்திய செய்திகள்

BABY NAMES

Lorem Ipsum is simply dummy text of the printing and typesetting industry.

READ MORE