இங்கிலாந்தில் அங்கீகரிக்கப்பட்டுள்ள கொரோனா வைரஸ் தடுப்பூசிய பொதுமக்களுக்கு போடும் பணி நாளை செவ்வாய்க்கிழமை முதல் ஆரம்பிக்கப்படும் என அந்நாட்டு அரச மற்றும் சுகாதார அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
பைசர்-பயோன்டெக் தடுப்பூசிக்கு உலகில் முதல் நாடாக இங்கிலாந்து அங்கீகாரம் அளித்துள்ளது.
இதனை த்தொடர்ந்து இங்கிலாந்தில் நாளை முதல் பைசர் கொரோனா தடுப்பு மருந்து பயன்பாட்டுக்கு வர உள்ளது.
இதனிடையே பைசர் கொரோனா தடுப்பு மருந்து அமெரிக்காவில் எதிர்வரும் வெள்ளிக்கிழமை அங்கீகரிக்கப்பட்டு உடனடியாகப் பாவனைக்கு வரவுள்ளதாகத் தெரியவருகிறது.
அத்துடன், அதேநாளில் கனடா, சுவிட்சர்லாந்து உள்ளிட்ட நாடுகளிலும் இந்தத் தடுப்பூசி அங்கீகரிக்கப்பட்டு விரைவில் பாவனைக்கு வரும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.
Category: உலகம், புதிது
Tags: கொரோனா (COVID-19), இங்கிலாந்து