துருக்கியில் 99 தொன் எடையுள்ள மிகப் பெரிய தங்க புதையல் ஒன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதன் மொத்த மதிப்பு 6 பில்லியன் டொலா்கள் என மதிப்பிடப்பட்டுள்ளது.
இதன் மதிப்பு, உலகின் பல நாடுகளின் மொத்த உள்நாட்டு உற்பத்தி மதிப்பை விட அதிகமாகும்.
இந்த தங்கப் புதையல் கிடைத்ததை அடுத்து நாட்டில் பொருளாதார பாதிப்புகளை ஓரளவு எதிர்கொள்ள முடியும் என்ற நம்பிக்கையை துருக்கி வெளியிட்டுள்ளது.
துருக்கியில், உர நிறுவனம் ஒன்று வாங்கிய நிலத்தில் இந்த தங்க புதையல் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. அடுத்த இரண்டு ஆண்டுகளில் இங்கு தங்கம் வெட்டி எடுக்கப்படும். துருக்கி பொருளாதாரத்துக்கு இது மிகவும் உதவும் எனவும் அந்நாட்டு அரசாங்கம் தெரிவித்துள்ளது.
201-ஆம் ஆண்டில் துருக்கியின் மொத்த உள்நாட்டு உற்பத்தி 77 ஆயிரம் கோடி டொலராகும்.
தங்கம் கண்டுபிடிக்கப்பட்ட நிலையில், உர நிறுவனத்தின் பங்கு விலையும் அதிகரித்துள்ளது. அண்மையில் 38 தொன் தங்கத்தை உற்பத்தி செய்ததன் மூலம் பெரிய சாதனையை துருக்கி படைத்துள்ளது.அடுத்த ஐந்து ஆண்டுகளில் தங்க உற்பத்தி 100 தொன்னாக உயரும் என அந்நாட்டின் எரிசக்தி மற்றும் இயற்கை வள அமைச்சர் பாத்தி டான்மெஸ் தெரிவித்துள்ளார்.