பிரேசில் துணை ஜனாதிபதி ஹாமில்டன் மவுராவ் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளாகிப் பாதிக்கப்பட்டுள்ளார்.
நேற்று ஞாயிற்றுக்கிழமை மேற்கொள்ளப்பட்ட பரிசோதனையில் ஹாமில்டன் மவுராவுக்கு தொற்று உறுதி செய்யப்பட்டதாக துணை ஜனாதிபதி அலுவலகம் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
துணை ஜனாதிபதி ஹாமில்டன் மவுராவ் அவரது உத்தியோகபூா்வ இல்லத்தில் தனிமையில் இருப்பார் எனவும் அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
பிரேசில் ஜனாதிபதி ஜெய்ர் போல்சனாரோ கடந்த ஜூலை மாதம் கொரோனா தொற்றுக்குள்ளாகி குணமடைந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
பிரேசிலில் இதுவரை 74 இலட்சத்து 84 ஆயிரத்துக்கும் மேற்பட்டவா்களுக்கு கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது. அத்துடன் 191,146 பேர் இன்றுவரை அங்கு கொரோனாவால் உயிரிழந்துள்ளதாக புள்ளவிபரங்கள் உறுதி செய்கின்றன.