Friday 26th of April 2024 01:03:41 PM GMT

LANGUAGE - TAMIL
-
வெளிநாட்டுப் பயணிகளுக்கு இரண்டு  வாரங்கள் தடை விதிக்கிறது இந்தோனேசியா!

வெளிநாட்டுப் பயணிகளுக்கு இரண்டு வாரங்கள் தடை விதிக்கிறது இந்தோனேசியா!


கொரோனாவின் வேகமாகப் பரவும் புதிய திரிவு வைரஸ் பரவுவதைத் தவிர்க்கும் நோக்கில் வெளிநாட்டினர் இந்தோனேசியாவுக்கு வர இரு வாரங்கள் தடை விதிக்கப்படும் என அந்நாட்டு வெளியுறவு அமைச்சர் ரெட்னோ மார்சுடி நேற்று தெரிவித்தார்.

ஜனவரி -01 முதல் இந்தத் தடை அமுலுக்கு வரும் எனவும் அவா் கூறினார்.

இந்தோனேசியா ஏற்கனவே இங்கிலாந்தில் இருந்து வரும் அனைத்து விமானங்களையும் தடை செய்துள்ளது. அத்துடன், ஐரோப்பிய நாடுகள் மற்றும் அவுஸ்திரேலியாவில் இருந்து வரும பயணிகளுக்கு கட்டுப்பாடுகளையும் அறிவித்துள்ளது.

இந்த ஆண்டின் தொடக்கத்தில் இருந்து வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் நாட்டுக்குள் நுழைய இந்தோனேசியா தடை விதித்தது. எனினும் வணிக நோக்கங்களுகளுடன் வருவோருக்கு கட்டுப்பாடுகளுடன் அனுமதி அளிக்கப்பட்டது. இந்நிலையில் தற்பொது விதிக்கப்படும் தடை தடை ராஜதந்திரிகளைத் தவிர அனைத்து வெளிநாட்டுப் பயணிகளுக்கும் பொருந்தும் என அமைச்சர் ரெட்னோ மார்சுடி கூறினார்.

உலகின் நான்காவது அதிக மக்கள் தொகை கொண்ட நாடான இந்தோனேசியா, நாட்டுக்குள் கடந்த மார்ச் மாதம் முதல் பரவிவரும் கொரோனா வைரஸைக் கட்டுப்படுத்த தொடர்ந்து போராடி வருகிறது.

இந்தோனேசியாவில் இதுவரை 720,000 பேருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. அத்துடன் கொரோனாவுடன் தொடா்புடைய 21,500 இறப்புகள் பதிவாகியுள்ளன.

நேற்று திங்கட்கிழமை இந்தோனேசியா 5,854 புதிய தொற்று நோயாளர்கள் உறுதிப்படுத்தப்பட்டதுடன், 215 கொரோனா மரணங்களும் பதிவாகின.

இந்தோனேசியாவின் ஜாவா தீவில் உள்ள மருத்துவமனைகள் தொற்று நோய் அதிகரிப்பு காரணமாக அண்மைய வாரங்களில் கடும் நெருக்கடிகளை எதிர்நோக்கி வருகின்றன.

இதேவேளை, ஆண்டு இறுதி விடுமுறை நாட்களில் மக்கள் அதிகளவில் ஒன்றுகூடிவந்ததால் தொற்று நோயாளர் தொகையில் அதிகரிப்பு ஏற்படும். இதனால் மருத்துவமனைகள் மேலும் நெருக்கடிளை எதிர்கொள்ளும் ஆபத்து உள்ளதாக இந்தோனேசியா சுகாதார அமைச்சின் மூத்த அதிகாரி அப்துல் கதிர் நேற்று திங்கட்கிழமை அச்சம் வெளியிட்டார்.

தலைநகர் ஜகார்த்தாவில் உள்ள மருத்துவமனைகள் ஏற்கனவே 84% தொற்று நோயாளிகளால் நிரம்பியுள்ளதாகவும் அவா் சுட்டிக்காட்டினார்.

இந்தோனேசியாவின் அதிக மக்கள் தொகை கொண்ட மாகாணமான மேற்கு ஜாவாவில், மருத்துவமனைகள் தற்போது 83% நிரம்பியுள்ளன. கிழக்கு ஜாவாவில் 77% வீத மருத்துவமனைப் படுக்கைகள் நிரம்பியுள்ளன எனவும் அவா் குறிப்பிட்டார்.

இந்நிலையில் தொற்று நோயாளர் தொகை தொடர்ந்து அதிகரித்தால் மருத்துவமனைகளின் பராமரித்துப் திறன் பாதிக்கப்படும். நிலைமையைச் சமாளிக்க ஏதுவாக ஜகார்த்தா பகுதியில் உள்ள சிகிச்சை மையங்களில் மேலும் 500 படுக்கைகள் இணைக்கப்படும் எனவும் சுகாதார அமைச்சின் மூத்த அதிகாரி அப்துல் கதிர் கூறினார்.


Category: செய்திகள், புதிது
Tags: உலகம்



பிந்திய செய்திகள்

BABY NAMES

Lorem Ipsum is simply dummy text of the printing and typesetting industry.

READ MORE