இந்திய வெளிவிவகார அமைச்சர் எஸ் .ஜெயசங்கர் இரண்டு நாள் உத்தியோகபூர்வ பயணமாக நாளை இலங்கை வரவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
குறித்த பயணத்தின் போது ஜனாதிபதி கோத்தபாய ராஜபக்ச, பிரதமர் மஹிந்த ராஜபக்ச, வெளிவிவகார அமைச்சர் தினேஸ் குணவர்த்தன ஆகியோரைச் சந்தித்தித்து உத்தியோகபூர்வ பேச்சுக்களில் ஈடுபடுவார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
2021 இல் வெளிநாட்டின் உயர் அதிகாரி ஒருவர் இலங்கைக்கு பயணம் மேற்கொள்வது இதுவே முதல் தடவையாகும்.
இந்தப் பயணத்தின் மூலம் இலங்கை - இந்தியா இடையேயான உறவை வலுப்படுத்திக்கொள்ள எதிர்பார்ப்பதாக இலங்கை வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது.