வவுனியா பசார் வீதியில் வர்த்தக நடவடிக்கையில் ஈடுபட்டுவருகின்ற 25 பேருக்கு இன்று கொரோனாத் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. குறித்த தகவலை வடக்கு மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் ஆ.கேதீஸ்வரன் தெரிவித்துள்ளார்.
யாழ்.பரிசோதனைக்கூடங்களில் மேற்கொள்ளப்பட்ட பிசிஆர் பரிசோதனைகளிலேயே குறித்த தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
இதேவேளை வவுனியா மாவட்டத்தைச் சேர்ந்த 27 பேர் அடையாளம் காணப்பட்டிருந்தனர். அவர்களில் 25 பேர் பசார் வீதியில் வர்த்தக நடவடிக்கையில் ஈடுபட்டுவருபவர்கள் என்றும் ஏனைய இருவரும் வவுனியா வைத்தியசாலை ஊடாக பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டவர்கள் என்றும் கேதீஸ்வரன் தெரிவித்தார்.
Category: செய்திகள், புதிது
Tags: கொரோனா (COVID-19), வவுனியா