யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தில் இடிக்கப்பட்ட முள்ளிவாய்க்கால் நினைவுத்தூபியை மீண்டும் அமைப்பதற்காக அத்திபாரம் வெட்டும்பணி மாணவர்களால் முன்னெடுக்கப்படுகிறது.
நேற்று முன்தினம், பல்கலைக்கழகப் பொறிறியலாளர்கள் குறித்த பகுதியை அளவீடு செய்து அடையாளப்படுத்தியிருந்தனர்.
இந்நிலையில் இன்று நினைவுத்தூபிக்கு மாணவர்களால் அத்திபாரம் வெட்டும் பணி நடைபெற்றுவருகின்றது.
துரிதமாக குறித்த தூபி கட்டிமுடிக்கப்படும் என்று தெரிவிக்கப்படுகிறது.
Category: செய்திகள், புதிது
Tags: இலங்கை, யாழ்ப்பாணம்