18 வயதிற்கு மேற்பட்ட அனைத்து இலங்கை இளைஞர், யுவதிகளுக்கும் இராணுவப் பயிற்சி வழங்கும் திட்டம் ஒப்புதலுக்காக நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட உள்ளது.
இந்தத் திட்டத்தை நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்க உத்தேசித்துள்ளதாக பொது பாதுகாப்பு அமைச்சர் ரியர் அட்மிரல் சரத் வீரசேகர தெரிவித்துள்ளார்.
நாட்டின் நலனைக் கருத்தில் கொண்டே இலங்கை இளைஞர், யுவதிகளுக்கு இராணுவப் பயிற்சி வழங்கும் திட்டத்தை முன்மொழியவுள்ளதாவும் அவா் கூறினார்.
இலங்கையர்களிடையே தலைமைத்துவப் பண்பை உருவாக்குவதே இந்திட்டத்தின் நோக்கம் எனவும் அவா் கூறினார்.