அனைத்துக் கட்சிக் கூட்டம் யாழ்ப்பாணத்தில் தனியார் விடுதி ஒன்றில் ஆரம்பமாகி இடம்பெற்று வருகின்றது.
ஒன்றிணைந்த அனைத்துக் கட்சிகளின் கூட்டம் யாழ்ப்பாணத்தில் ஆரம்பமாகி இடம்பெற்று வருகின்றது தமிழரசுக் கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜா தலைமையில் ஆரம்பமாகியுள்ள கூட்டத்தில் இலங்கை தமிழரசுக்கட்சி, தமிழ் மக்கள் தேசிய கூட்டணி மற்றும் தமிழ் மக்கள் கட்சி, ஈழ தமிழர் சுயாட்சிக் கழகம் கட்சிகளின் உறுப்பினர்கள் கலந்து கொண்டுள்ளார்கள்.
தற்போதைய அரசினால் முன்னெடுக்கப்பட்டுவரும் ,நில ஆக்கிரமிப்புக்கள், தமிழ் மக்கள் மீதான ஒடுக்குமுறைகள் மற்றும் அத்துமீறல்களை தடுப்பதற்கு எதிர்காலத்தில் தமிழ் மக்களின் நலன் கருதி முன்னெடுக்கப்பட வேண்டிய வேலைத்திட்டங்கள் தொடர்பில் விரிவாக ஆராயப்படும் என்று ஏற்பாட்டாளர்கள் தெரிவித்தனர்.