Friday 10th of May 2024 10:22:52 PM GMT

LANGUAGE - TAMIL
-
ஒன்ராறியோவில் நேற்று 44 பேர் மரணம்;  தொற்று நோயாளர் தொகை குறைகிறது!

ஒன்ராறியோவில் நேற்று 44 பேர் மரணம்; தொற்று நோயாளர் தொகை குறைகிறது!


ஒன்ராறியோ மாகாணத்தில் நேற்று மேலும் 44 கொரோனா மரணங்கள் பதிவானதுடன், 1,000 தொற்று நோயாளர்கள் உறுதி செய்யப்பட்டதாக மாகாண சுகாதார அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

மாகாணத்தில் சோதனைகள் அதிகரிக்கப்பட்டுள்ளபோதும் தொற்று நோயாளர்கள் தொகை தொடர்ந்து குறைந்து வருகிறது.

கடந்த ஒக்டோபர் மாதத்திற்குப் பிறகு முதன்முறையாக 900-க்கும் குறைவான புதிய தொற்று நோயாளர்கள் புதன்கிழமை பதிவான நிலையில் நேற்று வியாழக்கிழமை 1,038 புதிய தொற்று நோயாளர்கள் உறுதிப்படுத்தப்பட்டனர்.

அத்துடன், மாகாணத்தில் கடந்த 7 நாட்களில் பதிவான சராசரி தினசரி தொற்று நோயாளர் தொகை 1,015 ஆக உள்ளது. அதற்கு முந்தைய வாரத்தில் இந்த எண்ணிக்கை 1,264 ஆக இருந்தது.

இதேவேளை, நேற்று அறிவிக்கப்பட்ட 44 மரணங்களுடன், மாகாணத்தில் கொரோனா தொற்றுக்குள்ளாகிப் பாதிக்கப்பட்டு உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 6,773- ஆக அதிகரித்துள்ளது.

அத்துடன், மாகாணத்தில் உறுதிப்படுத்தப்பட்ட மொத்த தொற்று நோயாளர் எண்ணிக்கையும் 289,621 ஆக உள்ளது. பாதிக்கப்பட்டவர்களில் 272,146 பேர் இதுவரை குணமடைந்துள்ளதாகவும் ஒன்ராறியோ மாகாண சுகாதார அதிகாரிகள் தெரிவித்துள்ளனா்.


Category: உலகம், புதிது
Tags: கொரோனா (COVID-19), கனடா



பிந்திய செய்திகள்

BABY NAMES

Lorem Ipsum is simply dummy text of the printing and typesetting industry.

READ MORE