அவுஸ்திரேலியா முழுவதும் இந்த வாரம் முதல் பரந்தளவில் பொதுமக்களுக்கு தடுப்பூசி போடுவதற்கான ஏற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டுவரும் நிலையில் பிரதமர் ஸ்கொட் மோரிசனுக்கு இன்று ஞாயிற்றுக்கிழமை கொரோனா வைரஸ் தடுப்பூசி போடப்பட்டது.
தடுப்பூசி குறித்து பொதுமக்கள் மத்தியில் நம்பகத்தன்மையை அதிகரிப்பதற்காக ஊடகங்கள் முன்னிலையில் பிரதமர் ஸ்கொட் மோரிசனுக்கு தடுப்பூசி போட்டுக்கொண்டார்.
பரந்தளவு தடுப்பூசித் திட்டம் அவுஸ்திரேலியாவில் நாளை திங்கட்கிழமை முதல் ஆரம்பிக்கப்படவுள்ளது. அடுத்த வாரத்துக்கு குறைந்தது 60,000 பேருக்கு போட முடிவு செய்யப்பட்டுள்ளது.
இன்று பிரதமர் மோரிசளுடன், சில முன்னணி சுகாதார பணியாளர்கள், முதியோர் பரமரிப்பு இல்லங்களில் வசிப்போர், அவுஸ்திரேலியாவின் தலைமை செவிலியர் பேராசிரியர் அலிசன் மெக்மில்லன் மற்றும் தலைமை மருத்துவ அதிகாரி பேராசிரியர் பால் கெல்லி ஆகியோரும் தடுப்பூசி பெற்றனர்.
இதேவேளை, தடுப்பூசி பாதுகாப்பானது. அனைவருக்கும் முக்கியமானது. இது குறித்து எவரும் அஞ்சத் தேவையில்லை என தடுப்பூசியைப் போட்டுக்கொள்ள முன்னர் நெய்தியாளர்களிடம் பேசிய பிரதமர் ஸ்கொட் மோரிசன் கூறினார்.
அவுஸ்திரேலியாவில் முதல் முதலில் பைசர் தடுப்பூசிக்கு அங்கிகாரம் வழங்கப்பட்டது.
இந்த வார தொடக்கத்தில் அஸ்ட்ராஜெனெகா மற்றும் ஒக்ஸ்போர்ட் தடுப்பூசிகளின் அவசர கால பயன்காட்டுக்கு அவுஸ்திரேலியாவின் மருத்துவ கட்டுப்பாட்டு துறை அனுமதி வழங்கியது.
இந்நிலையில் வரும் வாரங்களில் அஸ்ட்ராஜெனெகா தடுப்பூசி தான் போட்டக்கொள்ளவுள்ளதாக அவுஸ்திரேலிய சுகாதார அமைச்சர் கிரெக் ஹன்ட் தெரிவித்துள்ளார்.
இதற்கிடையில் தடுப்பூசிக்கு எதிராக சில தரப்பினர் இன்று அவுஸ்திரேலியாவில் போராட்டங்களில் ஈடுபட்டமையும் குறிப்பிடத்தக்கது.
Category: உலகம், புதிது
Tags: கொரோனா (COVID-19), ஆஸ்திரேலியா