இலங்கை கிரிக்கெட் அணியின் வேகப்பந்து வீச்சாளர் லஹிரு குமார கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளாகியுள்ளமை உறுதி செய்யப்பட்டுள்ளது. மேற்கிந்திய தீவு அணியுடனான சுற்றுப் பயணத்துக்கு இலங்கை அணி இன்று புறப்படவிருந்த நிலையில் அணி வீரர்களுக்கு மேற்கொள்ளப்பட்ட பி.சி.ஆர். பரிசோதனையில் லஹிரு குமார கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளாகியுள்ளமை உறுதியானது.
மார்ச்-03 ஆம் திகதி ஆரம்பமாகவுள்ள இந்தத் தொடரில் மூன்று 20-20 போட்டிகள், மூன்று ஒருநாள் போட்டிகள் மற்றும் இரண்டு டெஸ்ட் போட்டிகளில் மேற்கிந்தியதீவுகள் மற்றும் இலங்கை அணிகள் மோதவுள்ளன. இந்நிலையில் இந்தத் தொடரில் லஹிரு குமாரவுக்கு பதிலாக சுரங்க லக்மல் இணைத்துக்கொள்ளப்படவுள்ளதாகத் தெரியவருகிறது. இதேவேளை, கொரோனா தொற்றுக்குள்ளான இலங்கையின் இரண்டாவது சர்வதேச கிறிக்கெட் வீரராக லஹிரு குமார பதிவாகியுள்ளார்.
முன்னதாக லஹிரு திரிமன்னவுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. சிகிச்சையின் பின்னர் தற்போது அவர் குணமடைந்துள்ளார்.
Category: விளையாட்டு, புதிது
Tags: இலங்கை