இலங்கை வந்துள்ள பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்களை இன்று சந்தித்துப் பேசத் திட்டமிட்டுள்ளார்.
இந்தச் சந்திப்பு இன்று பிற்பகல் இடம்பெறவுள்ளதாக இலங்கைக்கான பாகிஸ்தான் தூதரகம் ஊடாக உறுதி செய்யப்பட்டுள்ளதாக ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான ரவூப் ஹக்கீம் தனது ருவிட்டரில் தெரிவித்துள்ளார்.
முன்னதாக இம்ரான் கான் விஜயத்தின்போது இலங்கை நாடாளுமன்ற உறுப்பினர்கள் அவரைச் சந்திக்க நேரம் கோரியபோதும் அந்தச் சந்திப்புக்கு நேரம் ஒதுக்கப்படவில்லை.
இந்நிலையில் திட்டமிடப்பட்ட நிகழ்ச்சி நிரலுக்கு மேலதிகமாக இந்தச் சந்திப்பு இடம்பெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.