இந்தியாவுடன் பேச்சுவார்த்தை நடத்த தயாராக உள்ளதாக பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கான் அறிவித்துள்ளார்.
போர் நிறுத்த ஒப்பந்தத்தை முழுமையாகப் பின்பற்ற முடிவு செய்துள்ளதாக இந்திய-பாகிஸ்தான் இராணுவங்கள் நேற்று முன்தினம் கூட்டாக அறிவித்துள்ளமை பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கான் வரவேற்றுள்ளார்.
எல்லை கட்டுப்பாட்டு கோட்டு பகுதியில் போர் நிறுத்த ஒப்பந்தத்தை முழுமையாகக் கடைபிடிப்பதாக இருநாட்டு இராணுவங்களும் அறிவித்துள்ளன. இதே பாணியில் அனைத்து பிரச்னைகளையும் பேச்சு வார்த்தையின் மூலம் முடிவுக்குக் கொண்டு வர பாகிஸ்தான் தயாராக உள்ளது. அதற்கேற்ற சாதகமான சூழலை இந்த உடன்படிக்கை ஏற்படுத்தியுள்ளது நேற்று தனது ருவிட்டரில் இம்ரான் கான் தெரிவித்துள்ளார்.
தங்கள் வாழ்க்கையைத் தீர்மானிக்கும் உரிமை காஷ்மீர் மக்களுக்கு உண்டு என ஐ.நா. பாதுகாப்பு பேரவை தீர்மானம் கூறியுள்ளது. அதன்படி, காஷ்மீர் மக்களின் நீண்ட கால கோரிக்கைகளையும், உரிமைகளையும் நிறைவேற்றுவதற்குத் தேவையான நடவடிக்கைகளை இந்தியா எடுக்க வேண்டும் எனவும் அவா் தெரிவித்துள்ளார்.