Friday 26th of April 2024 01:33:14 PM GMT

LANGUAGE - TAMIL
-
வீதியோரம் தேசிக்காய் விற்கும் முன்னாள் விவசாய அமைச்சின் செயலாளர்!

வீதியோரம் தேசிக்காய் விற்கும் முன்னாள் விவசாய அமைச்சின் செயலாளர்!


விவசாய அமைச்சின் முன்னாள் செயலாளர் பி.விஜேரத்ன வீதியோரத்தில் தேசிக்காய் விற்பனை செய்யும் புகைப்படங்கள் சமூக ஊடகங்களில் வெளியாகி வேகமாகக் பரவி வருகிறது. கொழும்பு - கண்டி நெடுஞ்சாலையில் ஒரு கிலோ தேசிக்காய்கள் 150 என எழுதிவைத்து அவர் விற்பனையில் ஈடுபட்டுள்ளதை சமூக ஊடகங்களில் வெளியான புகைப்படங்களில் காண முடிகிறது. தனது மகனின் தோட்டத்தில் அறுவடை செய்யப்பட்ட தேசிக்காய்களையே அவர் வீதியில் வைத்து விற்பனை செய்வதாக சமூக ஊடக பதிவுகள் கூறுகின்றன.

விவசாய அமைச்சின் முன்னாள் செயலாளர் ஒருவர் வீதியோரத்தில் தேசிக்காய் விற்பனை செய்வது குறித்து வெளியான சமூக ஊடகப் பதிவுகள் தொடர்பில் பல்வேறு விதமான எதிர்வினைகளை பின்னூட்டங்களில் காண முடிகிறது.


Category: செய்திகள், புதிது
Tags: இலங்கை



பிந்திய செய்திகள்

BABY NAMES

Lorem Ipsum is simply dummy text of the printing and typesetting industry.

READ MORE