யாழ்ப்பாணம் வடமராட்சி கிழக்கைச் சேர்ந்த மீனவர்கள் இருவர் காணாமல் போனதாக அறிவிக்கப்பட்ட நிலையில் அவர்கள் மீட்கப்பட்டு கரை சேர்க்கப்பட்டுள்ளனர்.
வடமராட்சி கிழக்கு வத்திராயனைச் சேர்ந்த மீனவர்கள் இருவர் மீன்பிடிக்கச் சென்ற நிலையில் அவர்களின் தொடர்பு அறுந்து போன நிலையில் அவர்களைத் தேடும் நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டது.
மீனவர்கள் கடற்பரப்பில் வெவ்வேறு திசைகளில் தேடிப் புறப்பட்டனர். அவ்வாறு புறப்பட்ட மீனவர்களில் காணமல் போனவர்களில் ஒருவரான கே.கணேசலிங்கம் என்பவரின் மகனும் படகில் தேடிப் புறப்பட்டுள்ளனர்.
இதன் போது, கிளிநொச்சி மாவட்டம் சுண்டிக்குளம் கடற்பரப்பில் இயந்திரம் பழுதடைந்த நிலையில் காணப்பட்ட படகிலிருந்த இருவரும் மீட்கப்பட்டதுன், படகும் கரைக்கு கொண்டுவரப்பட்டுள்ளதாக அங்கிருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன. Category: செய்திகள், புதிது
Tags: வட மாகாணம், யாழ்ப்பாணம்