இலங்கையில் இன்று மேலும் 5 கொரோனா மரணங்கள் பதிவாகியுள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் அசேல குணவர்தன அறிவித்துள்ளார்.
பல்லேகலை, நுகேகொடை, பரவர்தனஓயா, மாத்தறை, கன்னதோட்டை ஆகிய பகுதிகளைச் சேர்ந்த 67,72,74,77,82 வயதான 4 ஆண்கள் மற்றும் பெண் ஒருவரே உயிரிழந்தவர்களாக இன்று அறிவிக்கப்பட்டுள்ளனர்.
இன்று அறிவிக்கப்பட்ட 5 மரணங்களுடன் இலங்கையில் இதுவரை கொரோனாவுக்கு உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 502 ஆக அதிகரித்துள்ளது.