மியான்மரில் கடந்த பெப்ரவரி மாதம் சதிப்புரட்சி மூலம் இராணுவம் ஆட்சியைக் கைப்பற்றிய பின்னர் அங்கு குறைந்தது 43 சிறுவா்கள் படுகொலை செய்யப்பட்டுள்ளதாக ஐ.நா. சிறுவர் பாதுகாப்பு அமைப்பு தெரிவித்துள்ளது.
மியான்மரில் பெப்ரவரியின் பின்னர் பாதுகாப்பு தரப்பினரால் மொத்தம் 536 பேர் படுகொலை செய்யப்பட்டுள்ளனர். அவா்களில் 43 பேர் சிறுவா்கள் என மியான்மர் கண்காணிப்புக் குழு தெரிவித்துள்ளது.
இதற்கிடையில், ஆட்சியிலிருந்து வெளியேற்றப்பட்டு இரகசிய இடத்தில் சிறை வைக்கப்பட்டுள்ள மக்களால் தெரிவு செய்யப்பட்ட ஆங் சான் சூகி நாட்டின் இரகசிய சட்டங்களை மீறியதாக குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது.
ஆங் சான் சூகி உள்ளிட்ட மற்றும் அவரது நான்கு கூட்டாளிகளுக்கு எதிராக கடந்த வாரம் குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டது. எனினும் அவர்களுக்கு எதிராக இரகசிய சட்டங்களை மீறிய குற்றஞ்சாட்டு முன்வைக்கப்பட்டுள்ளது இப்போதே வெளிச்சத்துக்கு வந்துள்ளது.
இந்தக் குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டதால் ஆங் சாங் சூகி உள்ளிட்டோருக்கு 14 ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை விதிக்கப்படும் எனத் தெரிய வருகிறது.