Thursday 25th of April 2024 08:36:06 PM GMT

LANGUAGE - TAMIL
-
செவ்வாய் கிரகத்திலும்  நில அதிர்வு; நாசாவின் ரோவர் விண்கலம் கண்டறிவு!

செவ்வாய் கிரகத்திலும் நில அதிர்வு; நாசாவின் ரோவர் விண்கலம் கண்டறிவு!


பூமியில் ஏற்படும் நில அதிர்வு போன்று செவ்வாய் கிரகத்திலும் நில அதிர்வு (Marsquake) பதிவாகியுள்ளதை நாசா விஞ்ஞானிகள் ஆய்வுக்காக அனுப்பிய சிறிய ரக ரோவர் விண்கலம் கண்டுபிடித்துள்ளது.

செவ்வாய் கிரகத்தின் சர்பேரஷ் ஃபோசே (Cerberus Fossae) என்கிற பகுதியில் 3.3 மற்றும் 5 ரிக்டர் அளவில் நில அதிர்வு பதிவாகியுள்ளது இதன்மூலம் தெரியவந்துள்ளது.

அமெரிக்க விண்வெளி ஆராய்ச்சி மையமான நாசாவின் கிளை நிறுவனம் 'இன்சைட் ரோவர்' என்கிற சிறிய ரக ரோவரை கடந்த 2018-ஆம் ஆண்டு நவம்பர் மாதம் செவ்வாய் கிரகத்துக்கு அனுப்பியது.

இரண்டு ஆண்டுகளாக இந்த சிறிய ரோவர் செவ்வாய் கிரகம் தொடர்பான முக்கிய தகவல்களைத் திரட்டி அவ்வப்போது நாசா விஞ்ஞானிகளுக்கு அனுப்பிவருகிறது. இதுவே செவ்வாயில் நில அதிர்வு ஏற்படுவதை கண்டுபிடித்துள்ளது.

இதுகுறித்து மேலும் ஆய்வுகளை முன்னெடுக்க நாசா விஞ்ஞானிகள் முடிவெடுத்துள்ளனர்.


Category: உலகம், புதிது
Tags: அமெரிக்கா



பிந்திய செய்திகள்

BABY NAMES

Lorem Ipsum is simply dummy text of the printing and typesetting industry.

READ MORE