சிக்கிம்-நேபாள எல்லைக்கு அருகே நேற்றிரவு 5.4 ரிக்டர் அளவில் நில நடுக்கம் பதிவானது.
திடீர் நிலநடுக்கம் காரணமாக கட்டிடங்கள் லேசாக குலுங்கியதால் மக்கள் அச்சத்துடன் வீடுகளை விட்டு வெளியேறி வீதிகளில் தஞ்சமடைந்தனர்.
சிக்கிம்-நேபாளம் எல்லை அருகே 10 கி.மீ ஆழத்தில் 5.4 ரிக்டர் அளவில் நேற்று இரவு 8.49 மணியளவில் இந்த நில அதிர்வு பதிவானதாக நில அதிர்வுக்கான தேசிய மையம் உறுதிப்படுத்தியுள்ளது.
வடக்கு வங்கதேசம், இந்தியாவின் அசாம் மற்றும் பீகாரின் சில பகுதிகள், நேபாளம் மற்றும் பூட்டான் உள்ளிட்ட பகுதிகளில் இந்த நிலநடுக்கம் உணரப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதேவேளை, இந்த நில நடுக்கத்தால் பாரிய பாதிப்புக்கள், உயிர் சேதங்கள் ஏதும் ஏற்பட்டதாக இதுவரை தகவல்கள் வெளியாகவில்லை.
இந்தியாவில் நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்ட பீகார், அசாம் மற்றும் சிக்கிம் மாநில முதலமைச்சர்களுடன் பிரதமர் மோடி தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசியதாக இந்திய மத்திய அரசு வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.