ஜனநாயக ரீதியாக மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட யாழ். மாநகர முதல்வர் இலங்கை அரசால் கைது செய்யப்பட்டமை குறித்து அதிர்ச்சியடைவதாக கனடா - ஒன்ராறியோ மாகாண சட்டமன்ற உறுப்பினர் விஜய் தணிகாசலம் தெரிவித்துள்ளார்.
மக்களால் தெரிவு செய்யப்பட்ட தமிழ் பிரதிநிதிகளுக்கு இலங்கையில் பாதுகாப்பு இல்லை எனவும் அவா் குறிப்பிட்டுள்ளார்.
இந்தக் கைது ஜனாநாயகத்துக்கான அச்சுறுத்தலாகும். இந்தக் கைது நடவடிக்கையை நான் வன்மையாகக் கண்டிக்கிறேன். கைது செய்யப்பட்டுள்ள யாழ்.மாநகர முதல்வரை உடனடியாக விடுவிக்குமாறு கோரிக்கை விடுக்கிறேன் எனவும் ஒன்ராறியோ சட்டமன்ற உறுப்பினர் விஜய் தணிகாசலம் தனது ருவிட்டர் தளத்தில் கருத்து வெளியிட்டுள்ளார்.