ஈரான் - நடான்ஸ் அணு உலை மையம் நேற்று ஞாயிற்றுக்கிழமை திடீரென இருளில் மூழ்கியதால் பரபரப்பு ஏற்பட்டது.
இதன் பின்னணியில் இணையவழித் தாக்குதல் இருக்கலாம் எனவும். இத்தாக்குதலுடன் இஸ்ரேலுக்கு தொடர்பிருக்கலாம் எனவும் ஈரானிய அதிகாரிகள் சந்தேகம் வெளியிட்டுள்ளனர்.
இந்த சம்பவத்தை ‘அணு பயங்கரவாதம்’ என ஈரான் அணுசக்தி நிறுவனத்தின் தலைவா் அலி அக்பா் சலேஹி வா்ணித்துள்ளார்.
ஈரான் - நடான்ஸ் அணு உலை மையத்தில் புதிய மேம்படுத்தப்பட்ட தொழில்நுட்பத்தில் யுரேனியத்தை விரைவாக செறிவூட்டத் தொடங்கிய சில மணி நேரத்தில் ஞாயிற்றுக்கிழமை திடீரென மின்தடை ஏற்பட்டமையானது இது திட்டமிட்ட தாக்குதலா? என்ற சந்தேகத்தை வலுவடையச் செய்துள்ளது.
அணுசக்தி தொழில்நுட்ப தினமான ஏப்ரல் 10-ஆம் திகதி புதிய மேம்படுத்தப்பட்ட தொழில்நுட்பத்தில் யுரேனியத்தை விரைவாக செறிவூட்டும் நடவடிக்கையை ஈரான் ஆரம்பித்தது குறிப்பிடத்தக்கது.
கடந்த 2015 ஏற்பட்ட சா்வதேச ஒப்பந்தத்தை மீறி நடான்ஸ் அணு உலை மையத்தில் யுரேனியம் செறிவூட்டல் நடவடிக்கைகளில் ஈரான் ஈடுபட்டுள்ளது. இதனை பல்வேறு நாடுகள் கடுமையாகக் கண்டித்து வருகின்றன.
ஈரான் உடனான அணுசக்தி ஒப்பந்தம் தொடா்பாக வல்லரசு நாடுகள் மீண்டும் பேச்சுவாா்த்தையில் ஈடுபட தயார் என அறிவித்துள்ளன.
இவ்வாறான நிலையில் ஈரான் அணு உலை மீது இணையவழி தாக்குதல் இடம்பெற்றதாக எழுந்துள்ள சந்தேகம் ஈரானை ஆத்திரமூட்டியுள்ளது.
ஈரான் - இஸ்ரேலும் இடையே நிழல் யுத்தம் ஒன்று இடம்பெற்று வரும் நிலையில் இஸ்ரேலே இந்தத் தாக்குதலில் பின்னணியில் இருக்கலாம் என ஈரான் நம்புகிறது. இது குறித்து ஈரான் தீவிர விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளது.
இந்நிலையில் இந்தச் சதித்திட்டத்தின் பின்னணியில் இஸ்ரேல் உள்ளது உறுதியானால் இரு நாடுகளுக்கும் இடையிலான பதட்டம் மேலும் அதிகரிக்கும் எனக் கருதப்படுகிறது.