இலங்கையின் முன்னாள் கிரிக்கெட் நட்சத்திரம் முத்தையா முரளிதரன் சென்னை அப்பலோ வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தமிழகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
ஆஞ்சியோ சிகிச்சைக்காகவே அவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருப்பதாக முதற்கட்டத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இன்று இரவு 7.30 மணிக்கு அவர் வைத்தியசாலைக்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளதாகவும் அவருடைய உறவினர்களும் வைத்தியசாலைக்கு சென்றிருப்பதாகவும் வைத்தியசாலை வளாகத்தில் குவிந்துள்ள தமிழகச் செய்தியாளர்கள் தெரிவிக்கின்றனர்.