ஆபிரிக்க நாடுகளில் ஒன்றான சாட் நாட்டின் ஜனாதிபதி, அந்நாட்டில் இடம்பெற்ற கிளர்ச்சியாளர்களுடனான மோதலில் கொல்லப்பட்டுள்ளார்.
சாட் நாட்டின் ஜனாதிபதி இத்ரிஸ் டெபி கொல்லப்பட்டுள்ளதாக அந்நாட்டு இராணுவம் உறுதிப்படுத்தியுள்ளது.
சாட் நாட்டின் வடபகுதியில் உள்ள கிளர்ச்சியாளர்களுடன் ஏற்பட்ட மோதலின் போது இவர் கொல்லப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அந்நாட்டில் அண்மையில் இடம்பெற்ற தேர்தலில் போட்டியிட்டு இவர் மீண்டும் ஜனாதிபதியாக தெரிவாகியிருந்தமை குறிப்பிடத்தக்கது.