இலங்கையில் வீதி விபத்துகளால் உயிரிழப்புகள் ஏற்படும் துயரம் தொடர்கதையாகி வரும் நிலையில் மேலும் 75 பேர் வீதி விபத்துகளில் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த ஒருவார காலத்தில் இலங்கையில் இடம்பெற்ற வாகன விபத்துக்களினால் 75 பேர் உயிரிழந்துள்ளதாக காவல்துறை பேச்சாளர் பிரதிக் காவல்துறை மா அதிபர் அஜித் ரோஹண தெரிவித்துள்ளார்.
குறித்த காலப்பகுதியில் இடம்பெற்ற வாகன விபத்துக்களினால் ஆயிரம் பேரளவில் காயமடைந்துள்ளனர்.
இவ்வாறான நிலையில், வாகன சாரதிகள், உந்துருளி மற்றும் ஈருருளி செலுத்துநர்கள், பாதசாரிகள் ஆகியோர் வீதி விதிமுறைகள் குறித்து அவதானத்துடன் செயற்பட வேண்டும் என காவல்துறை பேச்சாளர் கோரியுள்ளார்.