Friday 26th of April 2024 08:17:30 AM GMT

LANGUAGE - TAMIL
-
ஒன்ராறியோ கொரோனா மரணங்கள் 8 ஆயிரத்தைக் கடந்து அதிகரிப்பு!

ஒன்ராறியோ கொரோனா மரணங்கள் 8 ஆயிரத்தைக் கடந்து அதிகரிப்பு!


கனடா - ஒன்ராறியோ மாகாணத்தில் கொரோனா மரணங்கள் நேற்று வியாழக்கிழமை 8 ஆயிரத்தைக் கடந்து பதிவாயின. நேற்று மேலும் 41 கொரோனா மரணங்கள் மாகாணத்தில் பதிவான நிலையில் மொத்த கொரோனா மரணங்கள் 8,029 ஆக அதிகரித்துள்ளன.

அத்துடன், 3,871 புதிய கோவிட்-19 தொற்று நோயாளர்கள் மாகாணத்தில் நேற்று உறுதிப்படுத்தப்பட்டனர்.

நேற்று வரையான கடந்த 7 நாட்களில் ஒன்ராறியோவில் தினசரி சராசரி தொற்று நோயாளர் தொகை 3,810 ஆக பதிவாகியுள்ளது. ஒரு வாரத்துக்கு முன்னர் இந்த சாரசரி 4,176 ஆக இருந்தது.

வியாழக்கிழமை நிலவரப்படி மாகாணம் முழுவதும் 2,248 பேர் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அவர்களில் 884 பேர் தீவிர சிகிச்சை பிரிவுகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். 620 பேர் வென்டிலேட்டரின் உதவியுடன் சுவாசிக்கின்றனர்.

ஒன்ராறியோவில் ஆய்வகத்தால் உறுதிப்படுத்தப்பட்ட மொத்த தொற்று நோயாளர் தொகையும் 459,477 ஆக உயர்ந்துள்ளது. தொற்று உறுதி செய்யப்பட்டவர்களில் 413,010 பேர் குணமடைந்துள்ளனர்.

நேற்று வியாழக்கிழமை மாகாணத்தில் அதிகமாக ரொரண்டோவில் 1,172 கொரோனா வைரஸ் தொற்று நோயாளர்கள் உறுதிப்படுத்தப்பட்டனர். அத்துடன், பீல் பிராந்தியத்தில் - 901, யோர்க் பிராந்தியத்தில் - 392, டர்ஹாம் பிராந்தியத்தில் - 292, ஒட்டாவாவில் - 147 தொற்று நோயாளர்கள் உறுதிப்படுத்தப்பட்டதாக ஒன்ராறியோ சுகாதார அதிகாரிகள் தெரிவித்தனர்.

இதற்கிடையில், ஒன்ராறியோவில் மேலும் 2,589 பி.1.1.7 திரிபு கொரோனா தொற்று நோயாளர்கள் உறுதிப்படுத்தப்பட்ட நிலையில் இந்த வகை திரிபு வைரஸ் தொற்றுடன் இனங்காணப்பட்டவர்களின் எண்ணிக்கை 62,944 ஆக அதிகரித்துள்ளது.

பி.1 திரிவு வைரஸால் பாதிக்கப்பட்ட 96 பேரும், B.1.351 திரிபு வைரஸால் பாதிக்கப்பட்ட 23 பேரும் மாகாணத்தில் உறுதிப்படுத்தப்பட்டனர்.

இதேவேளை, இந்தியாவில் வேகமாகப் பரவி வரும் B.1.617 திரிபு கொரோனா வைரஸால் எத்தனை பேர் ஒன்ராறியோவில் பாதிக்கப்பட்டுள்ளனர்? என்பது குறித்த தகவல் வெளியிடப்படவில்லை.


Category: உலகம், புதிது
Tags: கொரோனா (COVID-19), கனடா



பிந்திய செய்திகள்

BABY NAMES

Lorem Ipsum is simply dummy text of the printing and typesetting industry.

READ MORE