தொற்றுநோய்க்கு எதிரான போராட்டத்தில் தனது அனுபவங்களை இந்திய சுகாதார நிபுணர்களுடன் பகிர்ந்து கொள்ள தயாராக இருப்பதாக சீனா தெரிவித்துள்ளதது.
இந்திய வெளியுறவு அமைச்சர் சுப்ரமண்யம் ஜெய்சங்கரை வெள்ளிக்கிழமை தொடர்புகொண்டு பேசிய சீன வெளியுறவு அமைச்சர் வாங் யி இந்தியாவுக்கு உதவ சீனா தயாராக இருப்பதாக மீண்டும் தெவித்தார்.
இதேவேளை, தொற்று நோயின் கோரப் பிடிக்குள் சிக்கி இந்தியா திண்டாடி வரும் நிலையில் இந்தியாவுக்கான தமது ஆதரவை சீன ஜனாதிபதி ஜி ஜின்பிங் தெரிவித்துள்ளார். இந்தியப் பிரதமருக்கு தனது அனுதாபச் செய்தியையும் ஜி ஜின்பிங் கடந்த வெள்ளிக்கிழமை அனுப்பிவைத்திருந்தைமையும் குறிப்பிடத்தக்கது.
Category: உலகம், புதிது
Tags: கொரோனா (COVID-19), சீனா, இந்தியா