இலங்கை கொரோனா வைரஸ் தொற்று நோயின் மூன்றாவது அலையுடன் போராடிவரும் நிலையில் நாடு தழுவிய ரீதியில் சமூக முடக்கலை அமுல் செய்ய வேண்டுமா? என்பது குறித்து அரசாங்கம் நேற்று கூடி ஆராய்ந்ததாக அமைச்சரவை இணை பேச்சாளர் அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல தெரிவித்தார்.
தேசிய கொரோனா ஒழிப்புச் செயலணி மற்றும் சுகாதார அதிகாரிகளுடன் இது குறித்து ஆலோசனை நடத்தியதாகவும் அவா் கூறினார்.
எனினும் அதிக தொற்று நோயாளர்கள் அடையாளம் காணப்படும் பகுதிகளை மட்டும் முடக்குவது போதுமானது என்பதே அரசாங்கத்தின் நிலைப்பாடு எனவும் அவா் குறிப்பிட்டார்.
எனினும் நாட்டின் நிலைமையைக் கருத்தில் கொண்டு அரசாங்கத்தின் நிலைப்பாட்டில் எதிர்காலங்களில் மாற்றங்கள் வரலாம் எனவும் கெஹலிய ரம்புக்வெல்ல தெரிவித்தார்.
இதேவேளை, இந்தியாவில் ஏற்பட்டுள்ளது போன்றதொரு நிலைமை இலங்கையில் ஏற்படாது எனவும் அவர் நம்பிக்கை வெளியிட்டார்.