Wednesday 8th of May 2024 05:40:06 PM GMT

LANGUAGE - TAMIL
.
144 பேரின் உயிரைப் பலியெடுத்தது கொரோனா: தமிழ்நாட்டில் தொடரும் கொரோனா வேட்டை!

144 பேரின் உயிரைப் பலியெடுத்தது கொரோனா: தமிழ்நாட்டில் தொடரும் கொரோனா வேட்டை!


தமிழ்நாட்டில் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில் கடந்த 24 மணி நேரத்தில் மேலும் 144 பேர் உயிரிழந்துள்ளதுடன் தொற்று உறுதி செய்யப்பட்டவர்களது எண்ணிக்கை 21 ஆயிரத்தை கடந்துள்ளது.

நேற்று (மே-04) மாலை வரையான நிலவரத்தின் அடிப்படையில் தமிழ்நாடு சுகாதாரத்துறை வெளியிட்ட அறிக்கையில் இத்தகவல் வெளியிடப்பட்டுள்ளது.

அதனடிப்படையில் நேற்று மலையுடனான கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் தொற்றுதியானவர்களது எண்ணிக்கை 21 ஆயிரத்து 228 ஆக பதிவாகியதன் மூலம் 21 ஆயிரத்தை கடந்து புதிய உச்சத்தை தொட்டுள்ளது.

அதிகபட்சமாக சென்னையில் இரண்டாவது நாளாக 6 ஆயிரத்தை கடந்த தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர். அதனடிப்படையில் 6 ஆயிரத்து 228 பேர் தொற்றாளர்களாக அடையாளம் காணப்பட்டுள்ளதுடன் சிகிச்சை பலனின்றி 36 பேர் அங்கு உயிரிழந்துள்ளனர்.

இதன்மூலம் சென்னையில் இதுவரை தொற்று உறுதி செய்யப்பட்டவர்களது எண்ணிக்கை 3 இலட்சத்து 58 ஆயிரத்து 573 ஆகவும் உயிரிழந்தவர்களது எண்ணிக்கை 4 ஆயிரத்து 894 ஆகவும் அதிகரித்துள்ளது.

இதையடுத்து தமிழ்நாட்டில் இதுவரை கொரோனாத் தொற்று உறுதி செய்யப்பட்டவர்களது மொத்த எண்ணிக்கை 12 இலட்சத்து 49 ஆயிரத்து 292 ஆக அதிகரித்துள்ளது.

அத்துடன் சிகிச்சை பலனின்றி மேலும் 144 பேர் உயிரிழந்துள்ளதை அடுத்து இதுவரை உயிரிழந்தவர்களது எண்ணிக்கை 14 ஆயிரத்து 612 ஆக உயர்ந்துள்ளது.

இதையடுத்து தற்போது வைத்தியசாலைகளில் சிகிச்சை பெற்று வருபவர்களது எண்ணிக்கை ஒரு இலட்சத்து 25 ஆயிரத்து 230 ஆக உயர்வடைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.


Category: செய்திகள், புதிது
Tags: கொரோனா (COVID-19), இந்தியா, தமிழ்நாடு, சென்னை



பிந்திய செய்திகள்

BABY NAMES

Lorem Ipsum is simply dummy text of the printing and typesetting industry.

READ MORE