Friday 26th of April 2024 04:21:27 AM GMT

LANGUAGE - TAMIL
-
மேலும் 3,780 பேர் இந்தியாவில் பலி; 3,82,415 பேருக்கு கொரோனா தொற்று!

மேலும் 3,780 பேர் இந்தியாவில் பலி; 3,82,415 பேருக்கு கொரோனா தொற்று!


இந்தியாவில் கடந்த 24 மணி நேரங்களில் 3 இலட்சத்து 82 ஆயிரத்து 315 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்ட அதேவேளை, நாட்டில் மிக அதிகளவாக 3,780 கொரோனா மரணங்களும் நேற்று பதிவாகின.

புதிய தொற்று நோயாளர்களுடன் நாட்டில் தொற்று உறுதி செய்யப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 2 கோடியே 6 இலட்சத்து 65 ஆயிரத்து 148 ஆக உயர்ந்துள்ளது. , மொத்த கொரோனா பலி எண்ணிக்கை 2,26,188 ஆக அதிகரித்துள்ளது.

தற்போது சிகிச்சையில் உள்ள கொரோனா நோயாளிகள் எண்ணிக்கை 34 இலட்சத்து 87 ஆயிரத்து 229 ஆக பதிவாகியுள்ளது.

கொரோனாவிலிருந்து நேற்று 3,38,439 பேர் குணமடைந்த நிலையில் மொத்த குணமடைந்தோர் எண்ணிக்கை ஒரு கோடியே 69 இலட்சத்து 51 ஆயிரத்து 731 ஆக உள்ளது.

இதுவரை நாட்டில் 16 கோடியே 4 ,லட்சத்து 94 ஆயிரத்து 188 பேருக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளதாக இந்திய மத்திய சுகாதார அமைச்சு இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


Category: உலகம், புதிது
Tags: கொரோனா (COVID-19), இந்தியா



பிந்திய செய்திகள்

BABY NAMES

Lorem Ipsum is simply dummy text of the printing and typesetting industry.

READ MORE