பங்காளதேசுடனான ஒருநாள் தொடரின் இறுதிப் போட்டியில் இலங்கை அணி நிர்ணயித்த 287 ஓட்டங்களுக்கு பதிலளித்து விளையாடி வரும் பங்களாதேஷ் அணி 3 விக்கெட்டுக்களை இழந்து தடுமாறி வருகிறது.
நாணயச்சுழற்சியில் வெற்றி பெற்ற இலங்கை அணித் தலைவர் குசல் பெரேரா முதலில் துடுப்பாட்டத்தை தேர்வு செய்தார்.
இதையடுத்து முதலில் துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்களில் 6 விக்கெட் இழப்பிற்கு 286 ஓட்டங்களைப் பெற்றது.
இலங்கை அணி சார்பில் அணித் தலைவர் குசல் பெரேரா அபாரமாக துடுப்பெடுத்தாடிய சதமடித்தார்.
சர்வதோச ஒருநாள் போட்டியில் 6வது சதத்தை நிறைவு செய்திருந்த குசல் பெரேரா 120 ஓட்டங்களைப் பெற்று ஆட்டமிழந்தார்.
தவிர, தனஞ்செய டீ சில்வா ஆட்டமிழக்காது 55 ஓட்டங்களையும், குணதிலக-39, குசல் மெண்டிஸ்-22 ஓட்டங்களையும் அதிகபட்சமாக பெற்றுக் கொண்டிருந்தனர்.
பந்து வீச்சில் தஷ்கின் அஹமட் 4 விக்கெட்டுக்களை வீழ்த்தியிருந்தார்.
3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரின் முதல் இரு போட்டிகளிலும் வெற்றி பெற்று தொடரை கைப்பற்றியுள்ள நிலையில் 287 ஓட்டங்களை எடுத்தால் தொடரை முழுமையாக கைப்பற்றும் முனைப்புடன் துடுப்பெடுத்தாடி வரும் பங்களாதேஷ் அணி தடுமாற்றமான தொடகத்தை பெற்று விளையாடி வருகிறது.
சற்று முன்னர் வரை 20 ஓவர்கள் நிறைவில் 3 விக்கெட் இழப்பிற்கு 70 ஓட்டங்களைப் பெற்றுள்ளது பங்களாதேஷ் அணி.
Category: விளையாட்டு, புதிது
Tags: இலங்கை