இந்தியாவில் எதிர்வரும் ஜூலை முதல் ஆகஸ்ட் வரையான காலத்தில் தினசரி 1 கோடி பேருக்கு கொரோனா தடுப்பூசி போட இந்திய மத்திய அரசு திட்டமிட்டு வருகிறது.
இந்தக் காலப்பகுதிக்குள் இந்தியாவில் போதியளவு கொரோனா தடுப்பூசி கையிருப்பில் இருக்கும் என்பதால் இது சாத்தியமாகலாம் என கொரோனா தடுப்பூசி பணிக்குழு தலைவர் என்.கே. அரோரா தெரிவித்துள்ளார்.
ஆகஸ்ட் மாதம் இந்தியாவிலேயே தயாரிக்கப்பட்ட சுமார் 250 மில்லியன் கொரோனா தடுப்பூசி மருந்துகள் கையிருப்பில் இருக்கும் என்று எதிர்பார்ப்பதாக அவர் கூறினார்.
சீரம் இந்தியா நிறுவனம் அனுப்பியுள்ள கடிதத்தில் ஜூலை மாத இறுதியில் தங்களுடைய கொரோனா தடுப்பூசி உற்பத்தி திறன் அதிகரிக்கப்படும் என்றும் அப்போது முதல் மாதந்தோறும் 10 முதல் 12 கோடி தடுப்பூசிகளை தயாரிக்க முடியும் என்று கூறியுள்ளதாக என்றும் அரோரா தெரிவித்துள்ளார்.
இவ்வாறான நிலையிலேயே தினமும் ஒரு கோடி பேருக்கு தடுப்பூசி போடுவதை இலக்காகக் கொண்டு செயற்பட்டு வருவதாகவும் அவா் குறிப்பிட்டார்.
Category: உலகம், புதிது
Tags: கொரோனா (COVID-19), இந்தியா