உலகநாயகன் கமலஹாசன் நடித்த ஒரு சில திரைப்படங்கள் உட்பட பல திரைப்படங்களை இயக்கிய ஜி.என் ரங்கராஜன் அவர்கள் இன்று காலை காலமானார். இவரின் மறைவு குறித்து கமல்ஹாசன் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.
நான் சினிமாவில் நுழைந்த காலம் தொட்டு இறக்கும் தறுவாய் வரை என் மீது மாறாத பிரியம் கொண்டவர் இயக்குனர் ஜி.என். ரங்கராஜன். கடுமையான உழைப்பால் தமிழ் சினிமாவில் தனக்கென்று தனித்த இடத்தை உருவாக்கி கொண்டவர்.
கல்யாணராமன், மீண்டும் கோலா, கடல் மீன்கள், எல்லாம் இன்பமயம், மகாராசன் என என்னை வைத்து பல வெற்றிப் படங்களைத் தந்தவர். என் மீது கொண்ட மாறாத அன்பால், தான் கட்டிய வீட்டிற்கு 'கமல் இல்லம் என்று பெயர் வைத்தார். எப்போதும் அவர் ஆரோக்கியமாக இருப்பதையே நான் விரும்புவேன் என்பதை அறிந்தவர்.
நிபந்தனையற்ற தூய பேரன்பினைப் பொழிந்த ஓர் அண்ணனை இழந்துவிட்டேன். அவரது குடும்பத்தார்க்கு என் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக்கொள்கிறேன் என்று தெரிவித்தார்.