இந்தியாவில் கொரோனா பாதிப்பு கடந்த நாட்களுடன் ஒப்பிடுகையில் தற்போது குறைவடைந்து வருகின்ற போதிலும் உலகளாவிய கொரோனா பாதிப்பில் தொடர்ந்து முன்னிலை வகித்துவரும் நிலையே காணப்படுகிறது.
அந்தவகையில் உலகளாவிய ரீதியில் தினமும் கொவிட்-19 காரணமாக உயிரிழக்கும் மூவரில் ஒருவர் இந்தியர் என்ற நிலை காணப்படுகிறது.
இன்று காலையுடன் நிறைவடைந்த கடந்த 24 மணி நேரத்தில் உலகளாவிய ரீதியில் 9 ஆயிரத்திற்கு மேற்பட்ட கொவிட்-19 மரணங்கள் நிகழ்ந்துள்ளன.
இந்தியாவில் மட்டும் 3,380 பேர் உயிரிழந்துள்ளனர்.
இதேபோன்று குறித்த 24 மணி நேரத்தில் உலகளாவிய ரீதியில் 3 இலட்சத்து 93 ஆயிரத்திற்கு மேற்பட்ட தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
இந்தியாவில் குறித்த காலத்தில் 120,529 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
அந்தவகையில் கொரோனா மரணம் மற்றும் பாதிப்பு அடிப்படையில் உலகளாவிய கொரோனா பாதிப்புக்குள்ளாகும் மூவரில் ஒருவர் இந்தியராக உள்ள நிலை அவதானிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
Category: உலகம், புதிது
Tags: கொரோனா (COVID-19), இந்தியா