‘நேரம்’ படத்தின் மூலம் தமிழ் மற்றும் மலையாள திரையுலகில் இயக்குநராக அறிமுகமானவர் தான் அல்போன்ஸ் புத்திரன். அதன் பின் 'பிரேமம்' படத்தை இயக்கி இருந்தார்.
கடந்த 2015 ஆம் ஆண்டு மலையாளத்தில் மட்டுமே வெளியான 'பிரேமம்' திரைப்படம், தமிழ் ரசிகர்களிடையேயும் மாபெரும் வரவேற்பை பெற்றது. இந்த படத்தில், மலர் டீச்சராக நடித்திருந்த சாய் பல்லவியின் கதாபாத்திரம் ரசிகர்களால் பெரிதும் விரும்பி பார்க்கப்பட்டது.
இந்நிலையில் இயக்குநர் தெரிவிக்கையில் முதலில் நான் பிரேமம் கதை எழுதிய போது மலர் டீச்சர் கதாபாத்திரத்தில் அசினை நடிக்க வைக்க விரும்பினேன். அந்தக் கதையும் மலையாளத்தில் தான் இருந்தது. பின்னர் அசினை தொடர்பு கொள்ள முடியாத காரணத்தால், மலர் டீச்சர் கதாபாத்திரத்தை தமிழ்நாட்டை சேர்ந்தவராக மாற்றியதுடன் நடிகை சாய் பல்லவியை இதற்காக தேர்ந்தெடுத்தேன் என குறிப்பிட்டார்.