வவுனியா – கனகராயன்குளம், புத்தூர் காட்டுப் பகுதியில் காயமடைந்த நிலையில், ஒரு மாதமாக காலமாக சிகிச்சை பெற்று வந்த யானை இன்று உயிரிழந்துள்ளது.
வவுனியா நகரிலிருந்து சுமார் 25 கிலோமீற்றர் தூரத்திலுள்ள புத்தூர் காட்டுப் பகுதியில் காயங்களுக்குள்ளான தந்தமுள்ள யானை, ஒரு மாதத்திற்கு முன்னர் கண்டுபிடிக்கப்பட்டது. இதன் கால் பகுதியில் காயங்கள் காணப்பட்டதுடன், தொடர்ச்சியாக சிகிச்சையளிக்கப்பட்டு வந்தது. எனினும், சிகிச்சை பலனின்றி குறித்த யானை இன்று உயிரிழந்துள்ளது.