பலாங்கொடை- மாமல்கஹ பிரதேச வீடொன்றிலிருந்த ரம்புட்டான் மரத்திலேறிய 10 வயது சிறுமி ஒருவர் பரிதாபகரமாக உயிரிழந்துள்ளார்.
ரம்புட்டான் பறிப்பதற்காக மரத்திலேறிய சிறுமி மரத்திலிருந்து தவறி விழுந்து, இரண்டு கிளைகளுக்கு மத்தியில் அவரது தலை சிக்கியதால் உயிரிழந்துள்ளார்.
பலாங்கொடை ரத்மலவின்ன பாடசாலையில் தரம் 6இல் கல்வி கற்கும் மலீசா தத்சரனி என்ற சிறுமியே இவ்வாறு மரணமடைந்துள்ளார்.
20 அடி உயரமான ரம்புட்டான் மரத்திலிருந்தே குறித்த சிறுமி விழுந்துள்ள நிலையில், வைத்தியசாலையில் சேர்க்கப்படும்போது உயிரிழந்துள்ளார்.