பயணக்கட்டுப்பாடு நீடிப்புத் தொடர்பிலான அறிவிப்பு வெளியாகியுள்ள நிலையில் சில நடவடிக்கைகள் தொடர்பிலான தளர்வினையும் கொரோனா தடுப்புச் செயலணி அறிவித்துள்ளது.
பயணக் கட்டுப்பாடு அமுலில் உள்ள காலப்பகுதியில் அத்தியாவசிய சேவைகள், ஆடை தொழிற்சாலைகள், முக்கிய கட்டுமான தளங்கள், கிராமிய சந்தைகள், விவசாய நடவடிக்கைகள் மற்றும் சேதன பசளை உற்பத்தி நடவடிக்கைகள் உள்ளிட்ட செயற்பாடுகள் சுகாதார வழிகாட்டுதலின் கீழ் முன்னெடுக்கப்படும் என இராணுவத் தளபதி சவேந்திர சில்வா அறிவித்துள்ளார்.
பயணக் கட்டுப்பாடு எதிர்வரும் 21 -ஆம் திகதிவரை நீடிக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ள நிலையிலேயே அவா் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.