இலங்கை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவின் 72 ஆவது பிறந்த நாளை ஒட்டி அவருக்கு வாழ்த்துச் தெரிவித்து சீன ஜனாதிபதி ஜி ஜின்பிங் இன்று கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளார்.
உலகில் பெரும் சவால்களை எதிர்கொண்டு, சீனாவும் இலங்கையும் ஒருவருக்கொருவர் நெருக்கமாக செயல்படுகின்றன. சீனா-இலங்கை உறவின் வளர்ச்சிக்கு நான் மிகுந்த முக்கியத்துவம் கொடுக்கிறேன்.
எங்கள் இரு நாடுகளுக்கும் நாட்டு மக்களுக்கும் அதிக நன்மையளிக்கும் வகையில் உங்களுடன் தொடர்ந்து பணியாற்ற விரும்புகிறேன் எனவும் தனது வாழ்த்துச் கடிதத்தில் சீன ஜனாதிபதி ஜி ஜின்பிங் தெரிவித்துள்ளார் என இலங்கைக்கான சீன தூதரகம் இன்று ருவிட்டரில் பதிவிட்டுள்ளது.
Category: செய்திகள், புதிது
Tags: கோத்தாபய ராஜபக்ஷ, இலங்கை