Friday 26th of April 2024 09:59:45 AM GMT

LANGUAGE - TAMIL
-
கொழும்பில் திரண்ட ஆயிரக்கணக்கான ஆசிரியர்கள் போராட்டம்!

கொழும்பில் திரண்ட ஆயிரக்கணக்கான ஆசிரியர்கள் போராட்டம்!


அதிபர்கள் - ஆசிரியர்களின் தொழிற்சங்க போராட்டங்கள் காரணமாக கொழும்பில் ஜனாதிபதி செலயதக்துக்கு அண்மையில் காலி வீதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டிருந்தது.

30 தொழிற்சங்கங்கள் இணைந்து கொழும்பில் ஆர்ப்பட்டமொன்றை முன்னெடுத்துள்ளன.

கொத்தலாவல பல்கலைக்கழகச் சட்டமூலம், ஆசிரியர்களின் சம்பள முரண்பாடு உட்பட்ட விடயங்களுக்கு எதிராக இலங்கை ஆசிரியர் சேவை சங்கம் உள்ளிட்ட பல்வேறு ஆசிரியர்கள் மற்றும் அதிபர்கள் தொழிற்சங்கங்கள் 11 நாட்களாக தொழிற்சங்க நடவடிக்கையில் ஈடுபட்டு வரும் நிலையில் நாடளாவிய ரீதியில் பல்வேறு போராட்டங்களை முன்னெடுத்து வருகின்றனர்.

குறித்த தொழிற்சங்க நடவடிக்கைகளின் அடிப்படையில் ஒன்லைன் மூலமான கல்வி நடவடிக்கைகளிலிருந்து ஆசிரியர்கள், அதிபர்கள் விலகியுள்ளனர்.

குறித்த போராட்டங்களின் தொடராகவே இன்று கொழும்பில் திரண்ட பல்லாயிரக்கணக்கான ஆசிரியர்களின் போராட்டத்தினால் காலி வீதியில் போக்குவரத்துப் பாதிப்பு ஏற்பட்டிருந்தது.

இதேவேளை தமது கோரிக்கைகளுக்கு தீர்வு கிடைக்காதவிடத்து போராட்டம் தொடரும் என்று தொழிற்சங்கங்கப் பிரதிநிதிகள் தெரிவித்துள்ளனர்.


Category: செய்திகள், புதிது
Tags: இலங்கை



பிந்திய செய்திகள்

BABY NAMES

Lorem Ipsum is simply dummy text of the printing and typesetting industry.

READ MORE