Friday 26th of April 2024 01:58:27 AM GMT

LANGUAGE - TAMIL
.
முன்னேஸ்வரம் ஆலய வருடாந்த மகோற்சவத்தில் பக்தர்கள் பங்கேற்க அனுமதியில்லை!

முன்னேஸ்வரம் ஆலய வருடாந்த மகோற்சவத்தில் பக்தர்கள் பங்கேற்க அனுமதியில்லை!


வரலாற்று சிறப்பு மிக்க பஞ்ச ஈஸ்வரங்களில் ஒன்றான சிலாபம் ஸ்ரீ முன்னேஸ்வரம் ஆலய வருடாந்த மகோற்சவத்தில் பக்தர்கள் பங்கேற்க அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.

சிலாபம் ஸ்ரீ முன்னேஸ்வரம் ஆலய வருடாந்த மகோற்சவம் எதிர்வரும் 26ஆம் திகதி ஆரம்பமாகி ஓகஸ்ட் மாதம் 22ஆம் திகதி வரையில் இடம்பெறவுள்ள நிலையில் அது தொடர்பான கலந்துரையாடலின் போதே இவ்வாறு பக்தர்கள் பங்கேற்க அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.

சிலாபம் பிரதேச செயலகத்தில் இடம்பெற்ற முன்னேஸ்வர ஆலய உற்சவம் தொடர்பான கலந்துரையாடலில் இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

தற்போதைய கொவிட்19 தொற்று பரவலை கருத்திற்கொண்டு சுகாதார பிரிவினரால் வழங்கப்பட்டுள்ள பரிந்துரைகளுக்கு அமைய, ஆலய குருமாரின் பங்குபற்றுதலுடன் ஆலயத்தினுள் மாத்திரம் சமய அனுஷ்ட்டானங்களை மேற்கொள்வதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.


Category: செய்திகள், புதிது
Tags: இலங்கை



பிந்திய செய்திகள்

BABY NAMES

Lorem Ipsum is simply dummy text of the printing and typesetting industry.

READ MORE