கைது செய்யப்பட்ட நாடாளுமன்ற உறுப்பினர் ரிஷாட் பதியுதீனின் மனைவி உட்பட்டவர்கள் கொழும்பு சட்டவைத்திய அதிகாரியிடம் முன்னிலைப்படுத்தப்பட்டுள்ளனர். இந்தத் தகவலை பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பிரதிப் பொலிஸ் மா அதிபர் அஜித் ரோகண வெளியிட்டுள்ளார்.
சிறுமி ஹிஷாலினி மரணம் தொடர்பில் ரிஷாட்டின் மனைவி, மனைவியின் தந்தை தரகர் ஆகியோர் கைது செய்யப்பட்டிருந்தனர்.
அதேவேளை,
பெண் ஒருவரை துஸ்பிரயோகத்துக்கு உட்படுத்தினார் என்ற குற்றச்சாட்டில் ரிஷாட்டின் மைத்துணரும் கைது செய்யப்பட்டிருந்தார்.
இந்நிலையில் அவர்கள் நால்வருமே சட்ட வைத்திய அதிகாரியிடம் முன்னிலைப்படுத்தியுள்ளனர்.