தமிழகத்தின் பிரபல தொலைக்காட்சியில் ஒளிபரப்பான பிக் பொஸ் தொடர்மூலம் பிரபலமடைந்தவரும் தென்னிந்திய சினிமா நடிகையுமான யஷிகா ஆனந்த் இன்று அதிகாலை பயணித்த கார் விபத்துக்குள்ளானதில் படுகாயம் அடைந்துள்ளார்.
சம்பவத்தில் அவருடைய நெருங்கிய தோழி ஒருவர் உயிரிழந்துள்ளதாக தமிழகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
மாமல்லபுரம் அருகே உள்ள சூளேரிக்காடு பகுதியில் கார் பயணித்துக்கொண்டிருந்தபோது வீதியின் தடுப்புச் சுவரில் கார் மோதி குறித்த விபத்துச் சம்பவம் நிகழ்ந்துள்ளது.
சம்பவத்தில் யஷிகாவின் நெருங்கிய தோழியான வள்ளிச்செட்டி பவானி (வயது 28) என்பவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார்.
யஷிகா ஆனந்த் மற்றும் இரண்டு நண்பர்கள் உட்பட்ட மூவர் படுகாயம் அடைந்துள்ளதாகவும் சம்பவம் தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டுவருவதாகவும் தமிழகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.