Friday 26th of April 2024 06:24:07 PM GMT

LANGUAGE - TAMIL
.
தென்னாபிரிக்க அணி இலங்கை வந்தடைந்தது!

தென்னாபிரிக்க அணி இலங்கை வந்தடைந்தது!


இலங்கை அணியுடனான கிரிக்கெட் தொடர்களில் பங்கேற்கும் தென்னாபிரிக்க அணி இன்று காலை இலங்கையை வந்தடைந்துள்ளது.

இலங்கை - தென்னாபிரிக்க அணிகளுக்கிடையே தலா 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் மற்றும் ரீ-20 தொடர்கள் இடம்பெறவுள்ளன.

இதையடுத்து தென்னாபிரிக்க அணியினர் இன்று காலை கொழும்பு கட்டுநாயக்கா சர்வதேச விமான நிலையத்தை வந்தடைந்தனர்.

இவ்வாறு வந்துள்ள தென்னாபிரிக்க கிரிக்கெட் அணியினருக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு சுகாதார - பாதுகாப்பு நடைமுறைகளுக்கமைவாக மேல் நடவடிக்கைக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர்.

இரு அணிகளுக்கும் இடையிலான முதலாது ஒருநாள் சர்வதேச கிரிக்கெட் போட்டி எதிர்வரும் செப்-02 கொழும்பு ஆர்.பிரேமதாஸ விளையாட்டரங்கில் பகல்-இரவு ஆட்டமாக நடைபெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

அதனைத் தொடர்ந்து...

2வது ஒருநாள் போட்டி - செப்-04

3வது ஒருநாள் போட்டி - செப்-07

1வது ரீ-20 போட்டி - செப்-10

2வது ரீ-20 போட்டி - செப்-12

3வது ரீ-20 போட்டி - செப்-14


Category: விளையாட்டு, புதிது
Tags: இலங்கை



பிந்திய செய்திகள்

BABY NAMES

Lorem Ipsum is simply dummy text of the printing and typesetting industry.

READ MORE