இலங்கை அணியுடனான கிரிக்கெட் தொடர்களில் பங்கேற்கும் தென்னாபிரிக்க அணி இன்று காலை இலங்கையை வந்தடைந்துள்ளது.
இலங்கை - தென்னாபிரிக்க அணிகளுக்கிடையே தலா 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் மற்றும் ரீ-20 தொடர்கள் இடம்பெறவுள்ளன.
இதையடுத்து தென்னாபிரிக்க அணியினர் இன்று காலை கொழும்பு கட்டுநாயக்கா சர்வதேச விமான நிலையத்தை வந்தடைந்தனர்.
இவ்வாறு வந்துள்ள தென்னாபிரிக்க கிரிக்கெட் அணியினருக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு சுகாதார - பாதுகாப்பு நடைமுறைகளுக்கமைவாக மேல் நடவடிக்கைக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர்.
இரு அணிகளுக்கும் இடையிலான முதலாது ஒருநாள் சர்வதேச கிரிக்கெட் போட்டி எதிர்வரும் செப்-02 கொழும்பு ஆர்.பிரேமதாஸ விளையாட்டரங்கில் பகல்-இரவு ஆட்டமாக நடைபெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
அதனைத் தொடர்ந்து...
2வது ஒருநாள் போட்டி - செப்-04
3வது ஒருநாள் போட்டி - செப்-07
1வது ரீ-20 போட்டி - செப்-10
2வது ரீ-20 போட்டி - செப்-12
3வது ரீ-20 போட்டி - செப்-14
Category: விளையாட்டு, புதிது
Tags: இலங்கை