பலஸ்தீனத்தின் காசா பகுதிகளில் இஸ்ரேலிய போர் விமானங்கள் நேற்று திங்கட்கிழமை சரமாரித் தாக்குதல் நடத்தின.
காசா பகுதியில் இருந்து வெடிபொருள்களைக் கொண்ட பலூன்கள் இஸ்ரேலை நோக்கி பறக்கவிடப்பட்டன. இதனால் சில இடங்களில் காட்டுத் தீ பரவல் ஏற்பட்டதாக இஸ்ரேலிய தீயணைப்புத் துறை கூறுகிறது. இதனையடுத்தே பாலஸ்தீனம் மீது தாக்குதல் நடத்தப்பட்டதாக இஸ்ரேல் விமானப் படை அறிவித்துள்ளது.
காசா மீது இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் 3 இடங்களில் தீப்பிடித்தன. எனினும் காசா மீது மேற்கொள்ள குண்டுவீச்சின் விளைவாக இதுவரை எந்த உயிரிழப்புகளும் பதிவாகவில்லை என பாலஸ்தீனிய சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.
இஸ்ரேலின் கடும் பாதுகாப்பு மிக்க சிறைச்சாலை ஒன்றில் இருந்து ஆறு பாலஸ்தீன போராளிகள் நேற்று தப்பியோடினர். இது பிரதமர் நாப்தலி பென்னட்டின் அரசாங்கத்திற்கு பெரும் சங்கடத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில் பாலஸ்தீன போராளிகள் தப்பியோடிய சில மணிநேரங்களுக்குப் பிறகு காசா மீதான தாக்குதல் இடம்பெற்றமை குறிப்பிடத்தக்கது.