Friday 26th of April 2024 09:43:10 PM GMT

LANGUAGE - TAMIL
-
இந்தோனேசிய சிறையில் இன்று காலை ஏற்பட்ட  பயங்கர தீ விபத்தில் சிக்கி 41 கைதிகள் பலி!

இந்தோனேசிய சிறையில் இன்று காலை ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில் சிக்கி 41 கைதிகள் பலி!


இந்தோனேசியா தலைநகர் ஜகார்த்தாவின் புறநகரில் உள்ள தங்கெராங் சிறைச்சாலையில் இன்று புதன்கிழமை அதிகாலை ஏற்பட்ட தீ விபத்தில் சிக்கி குறைந்தது 41 கைதிகள் உயிரிழந்தனர். மேலும் 39 பேர் காயமடைந்தனர்.

சிறைக் கூடத்தின் சி - பிரிவில் பெரும்பாலான கைதிகள் தூங்கிக் கொண்டிருந்தபோது தீ விபத்து ஏற்பட்டது. இந்தப் பிரிவில் 122 கைதிகள் தங்கியிருந்தனர். இந்தப் பிரிவு 82 கைதிகளையே தங்கவைக்கும் திறன் கொண்டபோதும் 40 பேர் அதிகமாகத் தங்கவைக்கப்பட்டிருந்ததாக தெரியவருகிறது.

இறந்த மற்றும் காயமடைந்த கைதிகளில் பெரும்பாலானோர் போதைப்பொருள் தொடர்பான குற்றங்களுக்காக சிறையில் அடைக்கப்பட்டிருந்தவர்களாவர். காயமடைந்தவர்களில் பலர் ஆபத்தான நிலையில் அவசர சிகிச்சைப் பிரிவுகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இதேவேளை, இந்தத் தீபிவத்துக்கான காரணம் என்ன? என்பது குறித்து அதுவரை அறிவிக்கப்படவில்லை. மின் கசிவே தீவிபத்துக்குக் காரணமாக இருக்கலாம் என சந்தேகம் வெளியிடப்பட்டுள்ளது. இது குறித்த விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

தீ பரவியபோது மொத்த சிறைச்சாலை வளாகத்திலும் 15 சிறை காவலர்கள் மட்டுமே கடமையில் இருந்தனர். மொத்ததமாக சிறையில் 2,000 கைதிகள் அகை்கப்பட்டிருந்தனர்.

எனினும் மொத்த சிறை வளாகமும் 600 பேரை அடைக்கும் திறன் கொண்டது என தகவல்கள் தெரிவிக்கின்றன.

தீ விபத்து குறித்து தகவல் அறிந்த தீயணைப்பு துறையினர் அங்கு வரைந்து பல மணி நேரப் போராட்டத்திற்குப் பின்னர் தீயை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்துள்ளனர்.


Category: உலகம், புதிது
Tags: உலகம்



பிந்திய செய்திகள்

BABY NAMES

Lorem Ipsum is simply dummy text of the printing and typesetting industry.

READ MORE