சிறைச்சாலையில் தான் தடுத்து வைக்கப்பட்டுள்ள சிறைக் கூடத்துக்கு மின் விசிறி ஒன்றை வழங்குமாறு பாராளுமன்ற உறுப்பினர் ரிஷாத் பதியுதீன் கேட்டுக்கொண்டுள்ளார்.
அவர் மகசின் சிறைச்சாலை அதிகாரிகளுக்குக் கடிதமொன்றை அனுப்பி, இவ்வாறு வேண்டுகோள் விடுத்துள்ளார்.
விசேட கைதிகளைத் தடுத்து வைக்கும் சிறைக் கூடத்தில் தான் தடுத்துவைக்கப்பட்டுள்ளார் எனவும், அங்கு வெப்பம் அதிகமாக இருப்பதால், சுகாதார காரணங்களைக் கருத்தில்கொண்டு, மின் விசிறி ஒன்றை வழங்குமாறும் ரிஷாத் பதியுதீன் எம்.பி. கேட்டுக்கொண்டுள்ளார்.
எனினும், அவருக்கு மின் விசிறியை வழங்க நடவடிக்கை எடுக்கப்படவில்லை என்று சிறைச்சாலைத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
மகசின் சிறைச்சாலையில் மருத்துவர் ஒருவரது கடமைக்குத் தொந்தரவு செய்தமை மற்றும் கையடக்கத் தொலைபேசி பாவித்தமை போன்ற குற்றச்சாட்டுக்களும் ரிஷாத் மீது முன்வைக்கப்பட்டுள்ளன.